சோற்றுக் கற்றாழையில் ஒரு சுவர்க்கம்

 சோற்றுக் கற்றாழையில் ஒரு சுவர்க்கம்

 சோற்றுக்கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை என்பது அனைவருக்கும் தெரியும்.

அதை உண்ணக்கூட முடியும் என்பது கொஞ்சம் பேருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் அதை உலகில் இருந்து உணவுப் பஞ்சத்தை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் மனிதனின் முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம்! சோற்றுக் கற்றாழையை மருத்துவப் பொருளாக மட்டுமல்ல முதல்தரமான உணவுப் பொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை எனது சொந்த ஆய்வாலும் அனுபவத்தாலும் கண்டறிந்திருக்கிறேன்.

அதற்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை அதில் அடங்கியுள்ள மருத்துவத் தன்மை உள்ள ஆனால் வாடையுடன் கசப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான திரவ பாகத்தை முழுமையாக அப்புறப் படுத்துவதே!

அத்துடன் முட்களையும் தோலையும் அப்புறப் படுத்தி சுத்தமான ஜெல்லியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.

அந்த பளிங்குபோன்ற ஜெல்லியை அடிப்படையான பொருளாக வைத்து எண்ணற்ற சுவையான பண்டங்களை இயற்கை முறையிலும் சமைத்தும்
 இனிப்பாகவும் காரமாகவும் நமக்கு வேண்டும் சுவைகளில் தயாரிக்கலாம்.

உணவாகவும் தின்பண்டமாகவும் தயாரிக்கலாம்.

எப்பேர்ப்பட்ட கொடும் பஞ்சத்திலும் வறட்சியிலும் காய்ந்து கருகிப்போகாமல் வாழ்ந்து நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய இதை பயனற்ற நிலங்களிலும் வேலிகளிலும் பயிர் செய்துவிட்டால் அது உலகம் உள்ளவரை அழியாது எந்தப் பராமரிப்பும் இல்லாமல் நிரந்தரமாகப் பயன் கொடுக்கும்!

அதனால் உலகில் ஒரு மனிதன்கூட உணவின்றி உயிர்விடத் தேவையே இருக்காது.

ஏதேனும் ஒரு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் முன்வந்தால் இதை வர்த்தக ரீதியில் வகை வகையான உணவுப் பொருட்களாகத் தயாரித்து மலிவாக விற்பனை செய்து உலகளாவிய மகத்தான வெற்றியை அடைய முடியும்!

முதலில் ஜெல்லியைப் பிரித்தெடுத்துக் கசப்பை நீக்கும்  எளிமையான முறையைப் பார்ப்போம்!.....


இது சோற்றுக் கற்றாழை .......


 வெட்டப்பட்ட சோற்றுக் கற்றாழை மடல்கள்..

 அது முள் நீக்கப்பட்டு கீற்றுக்களாக்கப்பட்ட  நிலையில்.....

 மேல்தோல் நீக்கப்படுதல்......



 குழாய்த் தண்ணீரில் நன்றாகப் பலமுறை கழுவுதல்.....ஒவ்வொரு முறையும் கழுவிய நீரை வடித்துவிட வேண்டும். 


 நீளமான துண்டுகளைச் சிறு துண்டுகள் ஆக்குதல்.....
 அதை மேலும் ஒரு முறை கழுவி நீரை வடித்துவிட்டு அதையும் வடிகட்டியால் வடிகட்டுதல்....


 கசப்புச் சுவை கொஞ்சமும் இல்லாத சோற்றுக் கற்றாழை ஜெல்லி தயார்!....
 இதைக் கொண்டு நாம் விரும்பும் சுவைகளில் எல்லாம் எண்ணற்ற உணவுப் பண்டங்கள் தயாரித்து இயற்கையாகவும் சமைத்தும் உண்ணலாம்.....





தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!


 தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!


 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பிடுவார். தனக்கு நீரிழிவு பிரச்னை இருப்பது அவருக்குத் தெரியும்... அதை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஒரு கட்டத்தில் பிரச்னை அதிகமானது. நண்பர் ஒருவர், நீரிழிவுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு போலி மருத்துவரின் முகவரியைச் சொல்ல, அங்கே சென்றார். அந்த மருத்துவர் சில இலைகளைக் கொடுத்தார். ‘இரவில் ஒரு தம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு வைத்து, காலையில் நீரைக் குடியுங்கள். நீரிழிவு ஓடிவிடும்’ என்றார். காமாட்சிநாதன் அதை நம்பினார்... தினமும் மூலிகைத் தண்ணீரைக் குடித்துப் பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. முக்கியமாக அவரால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. விறைப்புத் தன்மையை அடைவதிலேயே பிரச்னை! 

வேறு வழியில்லாமல் நீரிழிவு நிபுணரை அணுகினார். பரிசோதித்த டாக்டர், காமாட்சி நாதனின் உடலில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாகியிருக்கிறது என்பதைச் சொன்னார்... கடிந்து கொண்டார். ஆரம்ப  கட்டத்திலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், தாம்பத்தியத்தைப் பாதிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னை வளர்ந்திருக்காது என்பதை சுட்டிக் காட்டினார்.  நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண்கள் பாதிக்கப்படும்... சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகும்... இதய நோய்கள் ஏற்படும்... பாதங்களில் புண்கள் வரும். இவை அனைவரும் அறிந்தவை. சரி... நீரிழிவு, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? ஆம்... நிச்சயமாக... எப்படி? ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதையே ‘சர்க்கரை நோய்’ அல்லது ‘நீரிழிவு பிரச்னை’ என்கிறோம். 

நமது ரத்தக்குழாய்களில் மூன்று பகுதிகள் உள்ளன. உட்பகுதி ‘எண்டோதீலியம்’ என்று அழைக்கப்படும். இதனுள் பல ரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன. நீரிழிவு நோய் ஏற்பட்டால் Advanced glycation end products   எனும் பொருட்கள் உருவாகி ரத்தக்குழாயின் உட்சுவரை அடைத்துக் கொள்ளும். மற்ற உறுப்புகளுக்குப் போக வேண்டிய ரத்த ஓட்டம் இதனால் குறையும். நீரிழிவு பிரச்னையுடன் கொழுப்பும் அதிகமாகிவிட்டால் ரத்தக்குழாய்களின் சுவர்கள் மேலும் குறுகிவிடும். மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.  ஆணுறுப்பில் நிறைய காலி இடங்கள் உள்ளன. 

செக்ஸ் உணர்வுக்கு உட்படும் போது உடலின் மற்ற இடங்களில் உள்ள பெருமளவு ரத்தம், காலியான இடங்களில் சேர்ந்து ஆணுறுப்பை பலூன் போல விரிவடைய செய்கிறது... விறைப்புத் தன்மையை ஏற்படுத்து கிறது. இப்படி ஆணுறுப்புக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்தால், விறைப்புத்தன்மை அடைவதில் பிரச்னை ஏற்படும். சரியாக உறவில் ஈடுபட முடியாது. தாமதமாக விந்து வருவது, விந்து வராமல் போவது, மூத்திரப்பைக்குள் விந்து போய்விடுவது போன்ற பிரச்னைகளும் உண்டாகும். பெண்களுக்கு ‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் யோனிமலரில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் செக்ஸில் முழுமையான சுகத்தை அடைய முடியாது. பெண் உறுப்பில் நீரும் சுரக்காது. ‘டயாபடிக் நியூரோபதி’ பிரச்னையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமாகும். 

நீரிழிவு பிரச்னையால் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்னை அடைந்த ஆண்கள் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. நரம்புகளைத் தூண்டிவிடும், விறைப்புத் தன்மையை அடைய வைக்கும் மருந்துகளும் மாத்திரைகளும் இப்போது கிடைக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உட்கொள்ளவேண்டும். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது, அத்தியாவசியமான உடற்பயிற்சி களை மேற்கொள்வது, பொரித்த, வறுத்த உணவு வகைகளை தவிர்ப்பது, வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், தாம்பத்தியத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. பிரச்னை உள்ளவர்கள் உடனே அணுக வேண்டியது சரியான நீரிழிவு நிபுணர் ஒருவரை! 

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..

  உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ்  என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன. 

ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


எப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும். 

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்…?

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக்குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண்.

அதே பெண்தான் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள்.

அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
பாய் ப்ரண்ட், ஹேர்ள் ப்ரண்ட் என்றெல்லாம் இன்று பரிணாமம் பெற்றிருக்கும் நட்பு ஒரு காயாத பூவாகும். பள்ளிப்பருவத்தில் நம்முடன் படித்தவர், இடையில் காலத்தின் மாற்றத்தால் எங்கோ, எப்படியோ வாழும் சூழ்நிலையில், திடீரென்று ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்போது அங்கே கிடைக்கும் ஆனந்த பரவசம் இருக்கிறதே; அதை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் உடனே கிடைக்குமா?

இதே நட்பில் சுயநலத்துடன் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும்போது, அந்த பெண் காதலியாகி விடுகிறாள் அவனுக்கு! அந்த ஆண் காதலனாகி விடுகிறான் அவளுக்கு!நான் செடியில் பூத்துக் குலுங்கும் ரோஜாவை தேடித்தான் வந்தேன். அந்த ரோஜாவே என்னெதிரே நடந்து வரும் போது, ரோஜாப்பூவை மட்டும் பறிக்கவா? அல்லது அந்த செடிக்கே நான் சொந்தக்காரனாகி விடவா? என்று குழப்பம் வந்துவிட்டது. அதனால் உன் மீது எனக்கு காதலும் வந்துவிட்டது” என்று காதலன் கவிதையாய் உருகும்போது அந்த காதல் இன்னும் கொஞ்சம் ஆழமாக வேர்விட்டு விடுகிறது.

அவர்களது காதலுக்கு அவர்களே ஒரு அங்கீகாரம் கொடுக்கும்போது, அங்கே காதல் ஆலமரமாய், ஆழமாய் வேரூன்றி விடுகிறது. இருவரும் தங்களுக்குள் அங்கீகாரம் கொடுத்தபிறகு அந்த காதல் ரெயில் வேகத்தில் பயணிக்கிறது. அவர்களது காதல் பயணத்தில்
பெற்றோர்கள் சிக்னல்களாக வருகிறார்கள். அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தால் அந்த காதல் ரெயில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ரெட் சிக்னல் கிடைத்தால் அவர்களது பயணத்தில் திடீர் பிரேக் விழுந்து விடுகிறது. கிரீன் சிக்னலுக்காக போராடி வேண்டியிருக்கிறது.

பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு அவர்களுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கலாம். அல்லது, எவ்வளவுதான் முயன்றும் ரெட் சிக்னலே தொடரலாம். இருந்தாலும், அவர்களுக்குள் காதல் வாழ்கிறது. அது தொடர்ந்து வாழ வழி தேடுகிறார்கள்.

போராட்டம் என்றால் ஒரு முடிவு நிச்சயம் இருக்கும்தானே? அவர்களது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது; அல்லது, இன்னொரு வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள்.
அங்கே வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது. காதலில் வெற்றிப்பெற்றுவிட்டால் அங்கே காதலனுக்கு காதலி மனைவியாகிறாள். இல்லையென்றால், புதுப்பெண் ஒருத்தி மனைவியாகிறாள்.

இதுபோல்தான் பெண்ணுக்கும்…!
திருமணத்திற்கு பின்பு அவளது பொறுப்பு இன்னும் அதிகமாகி விடுகிறது. தாரத்திற்குப் பின்னர் தாய் என்ற நிலையை அடைகிறாள். அதன்பிறகும் அவளது பிறவிப்பயன் இன்னும் நீண்டு கொண்டே போகிறது, அவளது சேவை இந்த மனிதகுலத்திற்கு கண்டிப்பாக தேவை என்பதால்!
எடுக்கும் ஒரு பிறவியிலேயே தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய் திகழும் அந்த பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?

முதலில் தோழி…
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இதேபோல், நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லலாம்.
ஒன்றும் தெரியாத முட்டாளையும்கூட முதல்வனாக்கிவிடும் பவர் தோழிக்கு உண்டு.

அப்படிப்பட்ட தோழியிடம் நாம் எப்படி பழகலாம்?

* நமது சமுதாயச்சூழலில் பெண்ணுக்கு ஆணைப் போன்ற முழு சுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. தோழியாக பழக வேண்டும் என்றால்கூட ஒரு பெண் சமுதாய கட்டுப்பாடுகளைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. வாலிப பிரச்சினை என்று ஒன்று வரும்போது மிகுந்த பாதிப்புக்கு ஆளாகுபவள் பெண்ணே! அதனால், அவளது பெண்மைக்கு இழுக்கு ஏற்படாத வகையில் பழக வேண்டும்.

* நட்பு காதலாக மாறலாம். ஆனால், காதல் நட்பு ஆக மாறுவது பெரும்பாலும் முடியாத செயல்தான். அதனால், தோழியை நீங்கள் காதலிக்கும்பட்சத்தில், அவளும் உங்களை விரும்புகிறாளா என்பதை அறிந்து, அதன்பின் மேற்கொண்டு அதுபற்றி பேசவும்.

* உங்களுக்கும், தோழிக்கும் திருமணம் ஆன நிலையில், தோழியின் கணவர் அனுமதிக்கும்பட்சத்தில் மட்டுமே உங்கள் நட்பை தொடரலாம். அதுவும், ஒரு குடும்ப நண்பராக!

* திருமணத்திற்கு பிறகு, நேரில் பார்த்தால் மட்டும் நட்பை புதுப்பித்துக் கொள்வோம். மற்ற சூழ்நிலைகளில் வேண்டாம் என்று உங்கள் தோழி கூறினால், அதை பெருந்தன்மையோடு ஏற்று செயல்படுத்துங்கள். எங்கள் நட்பை எப்படி கொச்சைப்படுத்தலாம்? என்று கேட்டு, உங்கள் தோழி வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள்.

* கடைசியாக ஒன்று, உங்கள் தோழியையும் உங்கள் சகோதரிபோல் பாவித்து பழகுங்கள். அப்போது, உங்கள் நட்புக்கு நிச்சயம் களங்கம் வராது என்று சர்டிபிகேட் கொடுக்கலாம்.

அடுத்து காதலி…
———————-
இன்று காதலிக்காதவர்களே கிடையாது. ஆணும், பெண்ணும் கண்களால் மோதிக்கொண்டாலே அங்கே யாராவது ஒருவரிடத்தில் காதல் தீ பற்றிக்கொண்டு விடுகிறது.

இன்னொரு மறுக்க முடியாத உண்மை; டைம் பாஸாக வேண்டும் என்பதற்காகவும் சிலர் காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகும்வரை பேசுவோம், பழகுவோம், ஊர் சுற்றுவோம். திருமணம் ஆகிவிட்டால் நீ யாரோ, நான் யாரோ என்று போய்விடுவோம் என்று தங்களுக்குள் அக்ரிமென்டே போட்டுக்கொள்கிறார்கள். சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளின் லேட்டஸ்ட் கலாச்சாரம் இந்த வகை காதல்(?!).

உங்கள் காதலி உண்மையான காதலியாக இருந்தால், அவளிடம் எப்படி பழகலாம்?

* அவள் உங்களின் வருங்கால மனைவி என்பது உறுதியாக தெரிந்தால் மாத்திரமே காதலியுங்கள். இல்லையென்றால், பழகியவை எல்லாம் கனவென்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள். இதில் தப்பே இல்லை. காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் கழற்றிவிட்டு ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

* உங்கள் காதல் சைவக் காதலாக இருக்கட்டும். தவறான எண்ணத்தில் கை வைத்து விடாதீர்கள். நாளை, நீங்கள் கணவன்-மனைவி ஆகும்போது, “ச்ச்ச்சீசீ! அப்படியா நடந்து கொண்டோம்?” என்று அருவெறுப்பாக யோசிக்க வேண்டியது இருக்கும்.

* காதலியுடன் மனம் விட்டு பேசுங்கள். எதிர்காலம் பற்றி திட்டமிடுங்கள். முறையாக, இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புதல் வாங்கிக்கொள்ளுங்கள். காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

* மொத்தத்தில் உங்களுக்காக அவள் என்றும், அவளுக்காகவே நீங்கள் என்றும் எப்போதும் நினைத்திருங்கள்.

அடுத்ததாக மனைவி…
——————————-
பிறந்த சொந்தங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நம்மோடு, நமக்காக வாழ வருபவள். அவளை மகாலெட்சுமி என்றே போற்றுங்கள். அதில் தவறே இல்லை.

உங்களில் ஒருத்தி, உங்களுக்காக ஒருத்தியாக இருக்கும் அவளிடம் எப்படி பழகுகிறோம் என்பது முக்கியமல்ல. எல்லா விஷயங்களிலும் எந்த அளவுக்கு அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
அதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால் அவள் உங்களுக்கு நல்ல மனைவிதான். நீங்களும் அவளுக்கு நல்ல கணவன் தான்….!

முன்கூட்டியே விந்து வெளியேறுவதை கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள்

 முன்கூட்டியே விந்து வெளியேறுவதை கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள்

 நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது. இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும்.

எனினும், பெரும்பாலான ஆண்களுக்கு முன்கூட்டியே விந்தணுக்கள் வெளியேறுவதால், உச்சத்தை முழுமையாக அடையும் முன்னரே சுகம் பெறாமல் தோல்வியடைகின்றனர்.

முன்கூட்டியே விந்து வெளியேவது வயதான ஆண்களிடம் மிகவும் பரவலாக இருக்கும் பிரச்சனையாக உள்ளது. எனினும், இளைஞர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பிற மருந்துகளை பயன்படுத்தும் முன்னதாக, இந்த இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுடைய பிறப்புறுப்புகளின் தேவைகளையும், துணைவியாரையும் திருப்திப்படுத்துங்கள்.


இயற்கை வழிமுறைகள் முழுமையாக பலனளிக்க சில காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால், அவசரப்படாமல் காத்திருக்க வேண்டும் என்பது நாங்கள் கொடுக்கும் ஆலோசனையாகும். இந்த 10 வழிமுறையால் பலன் கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

தொண்டை வலிக்கு இதோ உடனடி விடை

  தொண்டை வலிக்கு இதோ உடனடி விடை

 எனக்கு அடிக்கடி தொண்டை வலி வருகிறது. அதை முழுதாகப் போக்க முடியுமா?

நீங்கள் குறிப்பிட்டுள்ள தொண்டை வலியை Pharyngitis என்பார்கள். Pharyngitis-யை Sore throat என்றும் அழைப்பார்கள். இது வந்தால் தொண்டையில் ஊசியை வைத்துக் குத்துவது போல் வலிக்கும். விழுங்குவதற்கும் கஷ்டமாக இருக்கும்.

ஜலதோஷம் வந்த பிறகும், வைரஸ் காய்ச்சல் வந்த பிறகும் இது காணப்படும். Group A streptococcus கிருமிகள் என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். குளிர் காலங்களில் இது அதிகம் வரலாம். இது பரவும் தன்மைகொண்டது. இதனுடன் காய்ச்சல், தலைவலி, தோலில் குறியீடுகள், நிணநீர் நாணங்களில் வீக்கம் போன்றவை காணப்படும்.

சில நேரம் தேவைப்பட்டால் தொண்டையில் இருக்கும் திசுவை எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். இது வைரஸால் வந்திருந்தால் Antibiotic-க்கால் பலன் கிடையாது. நம்முடைய உணவுப் பழக்கத்தின் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை இயல்பாக அதிகரிப்பதே சிறந்தது.

# இதற்கு துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு, திப்பிலி, தேயிலை போட்டு தேநீர் வைத்துக் குடிக்க வேண்டும்.

# சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

# கதிராதி வடி என்ற மாத்திரையை வாயில் சுவைக்க வேண்டும்.

காதில் பழுப்பு வராமல், (sinus) அழற்சி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 5 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குத் தொற்றும் தன்மை கொண்டது என்பதால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலர் இந்த நோயுடன் மிகுந்த தலைவலியாலும் அவதிப்படுவார்கள். நவீன மருத்துவத்தில் Penici##in, Ampici##in ஊசி 10 நாட்களுக்குப் போடுவார்கள்.

ஒரு சில நேரம் இது மூட்டு வாதமாக (Rheumatic arthritis) மாறிவிடும். சில நேரம் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். அதனால் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு ஆயுர்வேதத்தில் முதலில் இந்து காந்த கஷாயம், தசமூல கஷாயம் கொடுப்பார்கள். தாளிசாதி சூரணம், கண்டங்கத்திரி சூரணம், தூதுவளை சூரணம் கொடுப்பார்கள். பின்பு தாணிக்காய் கஷாயம், அக்கறா குடிநீரில் வாய் கொப்பளிக்கச் சொல்வார்கள்.

காய்ச்சல் போன பிறகு, நோய் வராமல் இருக்க இந்துகாந்த நெய், கூஷ்மாண்ட லேகியம், சியவன பிராச லேகியம் போன்றவற்றை கொடுப்பார்கள். இவற்றால் நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும். நோயில் இருந்து விடுபட்ட பிறகு, தலைக்கு கரிசலாங்கண்ணி தைலம் 10 சொட்டு தேய்த்துக் குளிக்கலாம்.

எளிமையான கைமருந்துகளைப் பார்ப்போம்:

# தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்படுவோருக்குப் பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியன உதவும். மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியுடன் மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு, கொதிக்க விட்டு, இறக்கிய கஷாயத்தில் சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண் ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால், தொண்டையைத் தொல்லைப் படுத்தும் பிரச்சினைகள் நீங்கிவிடும்.

# சிற்றரத்தையை இடித்துப் பொடியாக்கி, அதனுடன் 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தொண்டைப்புண் குறையும்.

# இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

# உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.


# கடுகைப் பொடி செய்து தொண்டையின் வெளிப்புறத்தில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

மலட்டுத்தன்மைக்கு ஒரு எளிய வீட்டு மருந்து…!.

 உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டு விடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.

தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

அத்திப் பழத்தை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சாப்பிடுவதால் ஏராளமான நோய்களுக்கு மருந்தாகின்றது.

குணமாகும் நோய்கள்:

மலட்டுத்தன்மை மூலம் வயிற்றில் தோன்றும் நோய்கள்
இரத்தசோகை
மலச்சிக்கல்
இரத்தத்தில் மிகுந்த கொழுப்பு
மூச்சுக்குழாய்/நுரையீரல் அழற்சி
ஆஸ்த்துமா

இத்துடன் வயிற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கவும், வயிற்றில் தோன்றும் அல்சருக்கும் நல்ல மருந்தாக திகழ்கிறது.
இப்பொழுது ஆலிவ் எண்ணையுடன் அத்திப்பழ மருந்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை:

40 உலர்ந்த அத்திப்பழங்கள்
1 லிட்டர் ஆலிவ் எண்ணெய்

செய்முறை:

ஒரு கண்ணாடி ஜாடியில் அத்திப்பழங்களை இடவும். மேலாக ஆலிவ் எண்ணையை ஊற்றவும். இந்தக் கலவை 40 நாட்கள் ஊறவிட வேண்டும். 40 நாட்கள் ஊறியவுடன் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு முன் ஒன்று வீதமாக குறைந்தது மூன்று அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். இது தீருவதற்க்கு முன்பாக அடுத்த செட்டை தயாராக்கிக் கொள்ளவும். மறக்காமல் கண்ணாடி ஜாடியை வெளிச்சம் இல்லாத குளிர்ந்த இடத்தில் வைக்கவும்

உலர்ந்த அத்திப்பழங்களில் கால்சியம், செம்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற மினரல்கள் நிறைந்து உள்ளன். பழுத்த அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர்நத பழங்களில் புரதம், சரக்கரை, மினரல்கள் அதிகமாக உள்ளது.

புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.

உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.

அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்.

வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.

செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.


சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்…