சோற்றுக் கற்றாழையில் ஒரு சுவர்க்கம்
சோற்றுக்கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை என்பது அனைவருக்கும் தெரியும்.
அதை உண்ணக்கூட முடியும் என்பது கொஞ்சம் பேருக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் அதை உலகில் இருந்து உணவுப் பஞ்சத்தை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் மனிதனின் முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம்! சோற்றுக் கற்றாழையை மருத்துவப் பொருளாக மட்டுமல்ல முதல்தரமான உணவுப் பொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை எனது சொந்த ஆய்வாலும் அனுபவத்தாலும் கண்டறிந்திருக்கிறேன்.
அதற்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை அதில் அடங்கியுள்ள மருத்துவத் தன்மை உள்ள ஆனால் வாடையுடன் கசப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான திரவ பாகத்தை முழுமையாக அப்புறப் படுத்துவதே!
அத்துடன் முட்களையும் தோலையும் அப்புறப் படுத்தி சுத்தமான ஜெல்லியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
அந்த பளிங்குபோன்ற ஜெல்லியை அடிப்படையான பொருளாக வைத்து எண்ணற்ற சுவையான பண்டங்களை இயற்கை முறையிலும் சமைத்தும்
இனிப்பாகவும் காரமாகவும் நமக்கு வேண்டும் சுவைகளில் தயாரிக்கலாம்.
உணவாகவும் தின்பண்டமாகவும் தயாரிக்கலாம்.
எப்பேர்ப்பட்ட கொடும் பஞ்சத்திலும் வறட்சியிலும் காய்ந்து கருகிப்போகாமல் வாழ்ந்து நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய இதை பயனற்ற நிலங்களிலும் வேலிகளிலும் பயிர் செய்துவிட்டால் அது உலகம் உள்ளவரை அழியாது எந்தப் பராமரிப்பும் இல்லாமல் நிரந்தரமாகப் பயன் கொடுக்கும்!
அதனால் உலகில் ஒரு மனிதன்கூட உணவின்றி உயிர்விடத் தேவையே இருக்காது.
ஏதேனும் ஒரு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் முன்வந்தால் இதை வர்த்தக ரீதியில் வகை வகையான உணவுப் பொருட்களாகத் தயாரித்து மலிவாக விற்பனை செய்து உலகளாவிய மகத்தான வெற்றியை அடைய முடியும்!
முதலில் ஜெல்லியைப் பிரித்தெடுத்துக் கசப்பை நீக்கும் எளிமையான முறையைப் பார்ப்போம்!.....
இது சோற்றுக் கற்றாழை .......
சோற்றுக்கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை என்பது அனைவருக்கும் தெரியும்.
அதை உண்ணக்கூட முடியும் என்பது கொஞ்சம் பேருக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் அதை உலகில் இருந்து உணவுப் பஞ்சத்தை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் மனிதனின் முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம்! சோற்றுக் கற்றாழையை மருத்துவப் பொருளாக மட்டுமல்ல முதல்தரமான உணவுப் பொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை எனது சொந்த ஆய்வாலும் அனுபவத்தாலும் கண்டறிந்திருக்கிறேன்.
அதற்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை அதில் அடங்கியுள்ள மருத்துவத் தன்மை உள்ள ஆனால் வாடையுடன் கசப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான திரவ பாகத்தை முழுமையாக அப்புறப் படுத்துவதே!
அத்துடன் முட்களையும் தோலையும் அப்புறப் படுத்தி சுத்தமான ஜெல்லியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
அந்த பளிங்குபோன்ற ஜெல்லியை அடிப்படையான பொருளாக வைத்து எண்ணற்ற சுவையான பண்டங்களை இயற்கை முறையிலும் சமைத்தும்
இனிப்பாகவும் காரமாகவும் நமக்கு வேண்டும் சுவைகளில் தயாரிக்கலாம்.
உணவாகவும் தின்பண்டமாகவும் தயாரிக்கலாம்.
எப்பேர்ப்பட்ட கொடும் பஞ்சத்திலும் வறட்சியிலும் காய்ந்து கருகிப்போகாமல் வாழ்ந்து நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய இதை பயனற்ற நிலங்களிலும் வேலிகளிலும் பயிர் செய்துவிட்டால் அது உலகம் உள்ளவரை அழியாது எந்தப் பராமரிப்பும் இல்லாமல் நிரந்தரமாகப் பயன் கொடுக்கும்!
அதனால் உலகில் ஒரு மனிதன்கூட உணவின்றி உயிர்விடத் தேவையே இருக்காது.
ஏதேனும் ஒரு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் முன்வந்தால் இதை வர்த்தக ரீதியில் வகை வகையான உணவுப் பொருட்களாகத் தயாரித்து மலிவாக விற்பனை செய்து உலகளாவிய மகத்தான வெற்றியை அடைய முடியும்!
முதலில் ஜெல்லியைப் பிரித்தெடுத்துக் கசப்பை நீக்கும் எளிமையான முறையைப் பார்ப்போம்!.....
இது சோற்றுக் கற்றாழை .......
வெட்டப்பட்ட சோற்றுக் கற்றாழை மடல்கள்..
அது முள் நீக்கப்பட்டு கீற்றுக்களாக்கப்பட்ட நிலையில்.....
மேல்தோல் நீக்கப்படுதல்......
குழாய்த் தண்ணீரில் நன்றாகப் பலமுறை கழுவுதல்.....ஒவ்வொரு முறையும் கழுவிய நீரை வடித்துவிட வேண்டும்.
நீளமான துண்டுகளைச் சிறு துண்டுகள் ஆக்குதல்.....
அதை மேலும் ஒரு முறை கழுவி நீரை வடித்துவிட்டு அதையும் வடிகட்டியால் வடிகட்டுதல்....
கசப்புச் சுவை கொஞ்சமும் இல்லாத சோற்றுக் கற்றாழை ஜெல்லி தயார்!....
இதைக் கொண்டு நாம் விரும்பும் சுவைகளில் எல்லாம் எண்ணற்ற உணவுப் பண்டங்கள் தயாரித்து இயற்கையாகவும் சமைத்தும் உண்ணலாம்.....